Pages

RSS

Welcome to my Blog
Hope you enjoy reading.

Friday 20 November 2009

தமிழ் பற்றி அறிஞர்கள் சொல்லியது....

கன்னடமும் களிதெலுங்கும்
கவின்மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்தெழுந்த்தே
ஒன்று பல ஆயிடினும்
ஆரியம்போல் உலக வழக்கொழிந்து
சிதையா உன் சீரிளமை திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துமே !
- பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை


திருக்குறள் மூலத்தையே நேராகப் படித்தல் வேண்டும் என்று யான் தமிழ் பயிலத் தொடங்கினேன். - காந்தியடிகள்

செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியையும் இலக்கியப் பெருமையில் இலத்தின் மொழியையும் வெல்ல வல்லது தமிழ்மொழி. - அறிஞர் வின்சுலோ

தமிழ் பண்டையது; நலம் சிறந்தது;உயர் நிலையில் உள்ளது; வடமொழி
உதவியின்றி இயங்கவல்லது. மொழியறிஞர் டாக்டர் கால்டுவெல்

0 comments:

Post a Comment