Pages

RSS

Welcome to my Blog
Hope you enjoy reading.

Saturday 12 December 2009

நான் படித்த பொன்னியின் செல்வன்


நான் படித்த பொன்னியின் செல்வன்

   புதினங்கள் அனைத்தும் கற்பனை கதைகளாகவே இருக்கும் என்ற என் எண்ணத்தினை அடியோடு மாற்றியது பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம், இது வெறும் நாவலா அல்லது சோழ வரலாற்றினை பிரதிபலிக்கும் சுவடா என்றா இரண்டாம் பகுதியை மிகப் பொருத்தம். சோழ வரலாற்றின் பெருமைகளையும், அன்றைய தமிழர்களின் வாழ்வியல் நிலைகளையும், பண்பியல்களையும், மன்னர் முதல் குடியானவன் வரை அனைத்து தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளை அழகு தமிழில் தித்திக்க பருகினேன் என்றுதான் கூற வேண்டும், வெறும் கற்பனைக்கதையை தான் படிக்க போகிறேன் என்ற எண்ணத்தில் படிக்க தொடங்கிய பொன்னியின் செல்வன் படித்து முடித்த பின்பு ஆ சோழ வரலாற்றினையே தெரிந்து கொண்டோம் என்ற ஓர் இன்ப உணர்வை ஏற்படுத்தி விட்டது.

இந்நாவலினை விமர்சிக்கும் தகுதியோ விருப்பமோ அணுவளவும் எனக்கில்லை. அத்தகைய பதிவுமன்று இது, இக்கதையில் இல்லை இல்லை இந்ந வரலாற்றில் வரும் அத்துணை பேரும் வாசகர்களின் நினைவில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றர்கள் என்பதில் மிகையில்லை.

இந்நாவலை படித்துக் கொண்டிருக்கும் போது ஈழப்போர் ஒருவாறு கசப்பான முடிவினை கண்டிருந்தது. அன்றயை காலக்கட்டத்தில் ஈழத்தில் இருந்த பொன்னியின் செல்வரின் மகா சைன்யத்திற்கு தஞ்சையிலிருந்து உணவுப் பண்டங்கள் அனுப்பி வைக்கப் பட்டன என்றும் அதற்கு கூட பழுவேட்டயர் ஆட்சேபம் தெரிவித்து இருந்தார் என்றும் படிக்கும் போது, இப்போதும் அத்தகையதொறு நிலையில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது, ஆனால் நம் தமிழக தலைவர்களால் நம் சொந்தங்களுக்கு எதுவும் அனுப்ப இயலவில்லை ஏன் அவர்களின் கண்ணிர்த்துளிகளை கூட நமக்குத் தெரியாமல் ஊடக இருட்டடிப்பு செய்து விட்டனர், இப்போது தடுத்தது எந்த பழுவேட்டயர்களோ அதன் பின்னணி என்னவோ



சோழர் ஆட்சி முறையில் நிர்வாக கட்டமைப்பு மிக அழகாக அறிய முடிகிறது. அந்தந்த ஊர்களில் உள்ளவர்களுக்கு ஊர்ப்பிரச்சினையில் முடிவெடுக்கும் அதிகாரம், தலைமை செயலர் போன்ற முதன் மந்திரி பதவி, தானிய களஞ்சிய அதிகாரிகள் அந்தந்த பகுதிகளுக்கு சிற்றரசர்கள் மாவட்ட மந்திரிகள் போன்று, இன்று கறுப்புப் பூனை படை போன்று அன்றே வேளக்காரப் படை நான் இங்கு நிர்வாக கட்டமைப்பு மட்டுமே ஒப்பீடு செய்திருக்கிறேன்

ஆனால் ஒன்று மட்டும் சற்று வியப்பாக இருக்கிறது, தஞ்சை பழையாறையில் நடக்கும் அரசியல் குழப்பங்கள் யாவும் காஞ்சி மற்றும் கோடிக்கரை வாழ் மக்களுக்கும் தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத அக்காலத்தில் விரைவாக பரவி விடுவது சற்றே ஆச்சரியம்தான். மேலும் சில இடங்களில் ஆசிரியர் தமிழகம் என்ற வார்த்தையை கதாபாத்திரங்கள் வாயிலாக பயன்படுத்தி உள்ளார், இது குறித்து எனக்கு ஒர் விடயம் புரியவில்லை, உதாரணததுக்காக, முதல்பாகம் 5ம் அத்தியாயத்தில் குரவைக் கூத்து-ல் கந்தன்மாறன் வந்தியத்தேவனிடம் பழுவேட்டையரின் முன்னோர்கள் சேர நாட்டியிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் என்று கூறுகிறார்கள், அன்றைய காலக்கட்டத்தில் தமிழகம் என்ற ஒருங்கிணைந்த நாடாக இருந்ததா ? அல்லது தமிழகம் என்பது சேர நாட்டினை உள்ளடக்கியது அல்லவா ?

பொன்னியின் செல்வன் பற்றி கேள்வி பட்ட போது இது ராசராசனின் ஆட்சிமுறை பற்றியோ அல்லது அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றி இருக்கும் என்று நினைத்து 12-ம் வகுப்பு விடுமுறையில் கணிணியில் மென்புத்தகம் படிக்க ஆரம்பித்த போது (அப்ப கணிணி நமக்கு புதிது, சும்மா ஒரு பில்ட் அப் பண்ண படிக்க ஆரம்பிச்சோம்) என்ன முதல் சில அத்தியாயத்தில் என்ன இது ராசராசன் வரலாறு என ஆரம்பித்தால் வந்தியதேவனாம் பழுவேட்டயராம் என்று இழுத்து கொண்டே போனதாலும் அப்போது கிரிக்கெட்டில் ஆர்வ மிகுதியால் படிக்க இயலவில்லை. மீண்டும் இப்படிப்பட்ட மனதாங்கலான சமயத்தில் சற்றே மனமாற்றமாய் இருந்தது இந்த பொன்னியின் செல்வன்.


வந்தியத்தேவனின் அதிர்ஷடமும், காதல் மோகமும் சுந்தர சோழரின் வனப்பும், ஆதித்த காலனின் வீரமும், அன்பில் அநிருத்தரின் மதிநுட்பமும், சேந்தன் அமுதனின் பக்தியும், பார்த்திப்பேந்தரின் துணிச்சலும், பழுவேட்டயரின் நாட்டுப்பற்றும், ரவிதாசனின் மந்திர சக்தியும்,  ஆழ்வார்கடியானின் ஒற்றறிவும், ஆகிய அனைத்தையும் பொருந்திய பொன்னியின் செல்வர் போன்றும்

பழைய மதுராந்தகர் கோழைத்தனமும், கந்தன்மாறனின் முட்டாள்தனமும், பினாகபாணியில் பேராசையும் போன்றவை இல்லாமல் இளைஞர்களாகிய நாம் இருக்க வேண்டும்


ஒர் இடத்தில்  பொன்னியின் செல்வர் சொல்வது போல் நமக்கு பிறகு 1000 ஆண்டுகள் கழித்து வாழப்போகிறவர்கள் நினைத்து பார்க்கும்படி செயற்கரிய செயல்களை செய்ய வேண்டும் என்று நண்பர்கள் முன்னே உறுதியெடுத்து கொண்டார், அதே போன்று செய்தும் காட்டினார்,

அது போல் இல்லையென்றாலும் அத்தகைய சிறப்பு மிக்கவர்களின் வழித்தோன்றல்கள்  நாம் என்ற செய்தியையாவது 1000 வருடங்கள் வேண்டாம் அடுத்த தலைமுறைக்கேனும் எடுத்துச் செல்வோம் என்ற உறுதி எடுப்போம் இன்று.

அன்றைய காலக்கட்டத்தில் பொது நன்மையில் அக்கறை கொண்டவர்கள் அதிகம். இன்று அத்தகையோர் அதி சிறும்பான்மை. அத்தகைய எண்ணம் கொண்டவர்கள் பற்றி தான் நாம் 1000 ஆண்டுகள் கழித்து படித்து கொண்டும் எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருக்கிறோம்.

செம்பியன் மாதேவியின் பெருங்குணமும், வானமா தேவியின் பதிபக்தியும், வானதியின் வெட்கமும், மணிமேகலையின் மாறா அன்பும் ,பூங்குழலியின் வாய்ப்பேச்சும் துணிச்சலும், மந்தாகினியின் காதலும், நந்தினியின் மோகனப் புன்னகையும், குந்தவையின் அறிவும் நாட்டுப்பற்றும், ஆகியவை ஒருங்கே கொண்ட இளைஞிகளாக நம்மவர்கள் இருக்க வேண்டும், இத்தகையோரில் தலைசிறந்தவளை இதை எழுதுபவனை கரம் பிடிக்க வேண்டும் :-)










Saturday 5 December 2009

ஒரு பாரசீக பாடலின் கருத்து

பழுத்த ஞானியாகிய ராபிய அம்மையார் நோயில் படுத்திருந்தார், முகமதியரகளின் மதிப்பிற்குரிய புனித மாலிக்கும் அறிஞர் ஹசனும் அவரை காண வந்தனர். "துாய முறையில் பிரார்த்தனை செய்பவர்கள் இறைவன் தரும் துயரத்தை சகித்துக் கொள்வார்கள்" என்றார் ஹசன். இன்னும் ஆழ்ந்த கருத்துப்பட தன் அனுபவத்தை மாலிக் கூறினார் "இறைவன் கொடுக்கும் அனைத்தையும் தண்டனையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள  வேண்டும்" என்று,
இருவரின் கருத்துக்களில் சுயநலம் இருப்பதை கண்ட ராபிய அம்மையார், "அருளாளர்களே இறைவனின் திருமுகத்தை காணும் பேறு பெற்றவர்கள் தாங்கள் தண்டிக்கப் பட்டோம் என்ற உணர்வே இல்லாமல் இருப்பார்கள் " என்றார்.
விவேகானந்தரின் ஞான தீபம் என்ற நுாலிருந்து,,

Monday 23 November 2009

கண்ணன் பாட்டு-1

கண்ணம்மா-என் குழந்தை
சின்னஞ் சிறு கிளியே-கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே-உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக் கனியமுதே-கண்ணம்மா!
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே-என் முன்னே
ஆடி வருந் தேனே!

ஓடி வருகையிலே-கண்ணம்மா!
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால்-உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ!

உச்சி தனை முகந்தால்-கவரும்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனையூரார்-புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ!

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ,-கண்ணம்மா!
உன்மத்த மாகு தடீ!

சற்றுன் முகஞ் சிவந்தால்-மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால்-எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ!

உன்கண்ணில் நீர்வழிந்தால்-என்னெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ!
என்கண்ணிற் பாவையன்றோ?-கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ?

சொல்லு மழலையிலே-கண்ணம்மா!
துன்பங்கள் தீர்ந்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே-எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய்.

இன்பக் கதைக ளெல்லாம்-உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே -உனைநோ
ஆகுமோர் தெய்வ முண்டோ?

மார்பில் அணிவதற்கே-உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே-உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ?

Friday 20 November 2009

பாரதிதாசன் கவிதைகள்-2

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும் வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப்பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனிவேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீ உயிர் நான் மறப்பேனோ?
செந்தமிழே! உயிரே! நறுந்தேனே
செயலினை மூச்சினை உனக்களித்தேனே
நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்த நன் மனிதராம், புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போல
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி

பாரதிதாசன் (இசையமுது - தமிழ்)

தமிழ் பற்றி அறிஞர்கள் சொல்லியது....

கன்னடமும் களிதெலுங்கும்
கவின்மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்தெழுந்த்தே
ஒன்று பல ஆயிடினும்
ஆரியம்போல் உலக வழக்கொழிந்து
சிதையா உன் சீரிளமை திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துமே !
- பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை


திருக்குறள் மூலத்தையே நேராகப் படித்தல் வேண்டும் என்று யான் தமிழ் பயிலத் தொடங்கினேன். - காந்தியடிகள்

செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியையும் இலக்கியப் பெருமையில் இலத்தின் மொழியையும் வெல்ல வல்லது தமிழ்மொழி. - அறிஞர் வின்சுலோ

தமிழ் பண்டையது; நலம் சிறந்தது;உயர் நிலையில் உள்ளது; வடமொழி
உதவியின்றி இயங்கவல்லது. மொழியறிஞர் டாக்டர் கால்டுவெல்

பாரதிதாசன் கவிதைகள்-1

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணம் என்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

------பாரதிதாசன் கவிதைகள்

Thursday 12 November 2009

பாரதி கவிதைகள்

திருக்காதல்


திருவே! நினைக்காதல் கொண்டேனே - நினது திரு
உருவே மறாவாதிருந் தேனே - பல திசையில்
தேடித் திரிந்திளைத்தேனே - நினக்கும் மனம்
வாடித் தினங்களைத் தேனே அடி, நினது
பருவம் பொறுத்திருந் தேனே - மிகவும் நம்பிக்
கருவம் படைத்திருந்தே தேனே - இடை நடுவில்
பையச் சதிகள் செய் தாயே - அதனி லுமென்
மையல் வளர்தல் கண்டாயே! - அமுதமழை
பெய்யக் கடைக்கநல் காயே - நினதருளில்
உய்யக் கருணைசெய் வாயே - பெருமை கொண்டு
வையந் தழைக்கவைப் பேனே - அமரயுகஞ்
செய்யத் துணிந்து நிற் பேனே - அடியென்று
தேனே! எனதிரு கண்ணே - எனையுகத்து
நானே! வருந் திருப் -பெண்ணே!

Saturday 10 October 2009

பொன்னியின் செல்வன் ஓவியங்கள்



வந்தியத்தேவனும் குந்தவை பிராட்டியும்


அன்பில் அநிருத்த பிரம்மராயர்



மதுராந்தகச் சோழன்


நந்தினி




வந்தியத்தேவன்

சோழ சாம்ராஜ்யம்

எடக்கல்
 


ஆதித்த கரிகாலச் சோழன்

சோழ சாம்ராஜ்ய கொடி
 
அட்டைப் படங்கள்
 
அட்டைப் படங்கள்
 
அட்டைப் படங்கள் - பெரிய பழுவேட்டயர்
 
விண்ணகரக்கோயில்
 

குந்தவையும் வானதியும்

நன்றி இளங்குமரன் ஐயா சிங்கப்பூர்

சுய விளம்பரம்

என்னைப் பற்றி பதிவுலகத்திற்கு...

மீனாட்சி சுந்தரம் என்ற பெயரை தாங்கிய நான் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் கூனவேலம்பட்டிப் புதூர் எனும் கிழக்கு குன்றுகளின் அடிவார நிழலில் அழகிய மலைச்சாரல் கிராமம் தான் நான் பிறந்த மண். பிறந்த வருடம் 1987. ஆண்டு 2004 வரை பள்ளிக் கல்வியினை அப்பகுதியின் பள்ளிகளில் பயின்று இளங்கலை திருச்சி தூய வளனார் கல்லூரி (St.Joseph’s College) (நான் படிச்ச கல்லூரியில் தான் அப்துல் கலாம் படிச்சாராம்..ஏன் நான் உட்கார்ந்த அதே பெஞ்ச் தான் அவரும் உட்கார்ந்தாராம் !!!) சேர்ந்து 2009-ல் முடிக்க மாட்டேன் திடமாக நம்பியிருந்த பட்டப்படிப்பினை முடிக்க வைத்தார்கள். இளங்கலை இயற்பியல் கற்றுக் கொண்டதை விட மனிதப் பண்புகள் சிறிது கற்றுக் கொள்ள வளனார் கல்லூரி வாய்ப்பு வழங்கியது. பதிவுலகத்தில் காலடி வைக்கும் இத்தருணத்தில் எமது கல்லூரியினை நன்றியுணர்வுடன் எண்ணி மகிழ்கின்றேன்.

பிறகு முதுகலை கல்விக்கு 2009 சூலை 14-ல் கடல் கடந்து சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக் கழகத்தில் (National University of Singapore) எதிர்பார்த்த எதிர்பாராத வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இளங்கலை படிப்பிற்கு மாறாகவும் விருப்பத்திற்கு எதிராகவும் பொருளாதார முன்னேற்றம் கருதியும் வெளியுலக அனுபவம் விரும்பியும் முதுகலை மென்பாருள் அமைப்பு பகுப்பின் பட்டய படிப்பு Post Graduate Diploma in System Analysis (PGDipSA) சேர்ந்து வெற்றி கரமாக படித்து முடித்தேன். 2009-ம் ஆண்டு எங்கள் வாழ்வில் மறக்க முடியாத பலவித நிகழ்வுகளை பதித்து சென்றுள்ளது.



சிங்கப்பூரில் படித்து கொண்டிருக்கும் சமயத்தில் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது பதிவுலகம் என்று ஒன்று இருப்பது பற்றி தெரியவில்லை. யாரோ எழுதுகிறார் நாமும் பொழுது போக படிப்போம் என்று இருந்தேன். 2009 தீபாவளி சமயத்தில் தெற்காசிய பதிவுலக சாம்பவான் விக்கி (http://vaazkaipayanam.blogspot.com/ ) அன்பிற்குரிய அண்ணன் சிங்கை பதிவுலக சாஸ்திரி யூசப் அய்யங்கார் (http://www.maraneri.com/) மதிப்பிற்குரிய அண்ணன் கோவிக்கண்ணன் பெரியவா(http://govikannan.blogspot.com/) . மற்ற நண்பர்கள் அனைவரையும் சந்திக்க நேர்ந்த்து.அவர்களின் தொடர்பினால் இன்று பதிவிட ஆரம்பித்திருக்கிறேன். இவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் என் நன்றியினை பதிவிடுவது மூலம் சமர்ப்பிக்கிறேன்.



என்னைப் பற்றி விவரமான மொக்கை போதும்னு நினைக்கிறேன். ஆம் இப்ப சிங்கப்பூரில் மென்ப்பாருள் பொறியாளராதான் பொட்டித் தட்டுறேன்

சரி மற்றவை இனி வரும் பதிவுகளில்.....

மீனாட்சி சுந்தரம்