பழுத்த ஞானியாகிய ராபிய அம்மையார் நோயில் படுத்திருந்தார், முகமதியரகளின் மதிப்பிற்குரிய புனித மாலிக்கும் அறிஞர் ஹசனும் அவரை காண வந்தனர். "துாய முறையில் பிரார்த்தனை செய்பவர்கள் இறைவன் தரும் துயரத்தை சகித்துக் கொள்வார்கள்" என்றார் ஹசன். இன்னும் ஆழ்ந்த கருத்துப்பட தன் அனுபவத்தை மாலிக் கூறினார் "இறைவன் கொடுக்கும் அனைத்தையும் தண்டனையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று,
இருவரின் கருத்துக்களில் சுயநலம் இருப்பதை கண்ட ராபிய அம்மையார், "அருளாளர்களே இறைவனின் திருமுகத்தை காணும் பேறு பெற்றவர்கள் தாங்கள் தண்டிக்கப் பட்டோம் என்ற உணர்வே இல்லாமல் இருப்பார்கள் " என்றார்.
விவேகானந்தரின் ஞான தீபம் என்ற நுாலிருந்து,,
0 comments:
Post a Comment