இரண்டாம் நாள்
முதல் வகுப்பு -தலைப்பு ஆணவம்
மும்மலங்கள் ஆணவம் கன்மம்,மாயை என்பன. பின்வரும் பதிவுகளில் ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம்.
பொதுவாக சைவ சிந்தாந்த சொற்களுக்கும் நாம் நடைமுறையில் பயன்படுத்த படும் சொற்களுக்கும் பொருள் முற்றிலும் மாறுபடுகின்றது. சைவ சிந்தாந்த வார்த்தைகளுக்கு தனி அகராதி தேவைப்படுகின்றது.
‘ஆணவம்’ என்றால் உயிரின் அறியாமைக்கு காரணமான ஒன்று, உமாபதி சிவாச்சாரியார் அவர்கள் ஆணவத்தினை ‘இருள்’ என்று பொருள் படும்படி உரை எழுதியுள்ளார்.
வள்ளுவர் கூட
“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.”
மு.வ உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
ஆணவம் என்பது Ego என்ற ஆங்கில வார்த்தையின் தமிழ் பொருளல்ல. இங்கு சைவ சித்தாந்தத்தின் பதச்சொல்லாக பொருள் கொள்தல் வேண்டும். உயிரன் அறியாமைக்குக் காரணமாக இருப்பது ஆணவம். ஆனால் அறியாமையே உயிரின் மெய் இயல்பல்ல,
ஆணவத்திலிருந்து அறியாமை பிறக்கின்றது. அறியாமையிலிருந்து ‘நான்’, ‘எனது’ என்ற பற்று பிறக்கின்றது
ஆணவத்தின் இலக்கணம்
· ஆணவம் அநாதியானது (தோற்றம்,மறைவு அற்றது)
· ஆணவம் உயிர் அறிந்த பின் அறிந்ததை மறக்கச் செய்வது
· எந்தவொரு பொருளின் இயல்பையும் மாற்ற இயலாது அது சில காலம் மறைக்கப்பட்டது இருக்கலாம், ஆனால் என்றைக்காவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும், மறைப்பதற்கு ஆணவம் காரணமாகலாம்
· இந்திய தத்துவங்கள் ஆணவம் என்ற கோட்பாட்டினை ஏற்றுக்கொள்வதில்லை
· அறிவும் ஆணவம் சேர்ந்த நிலையில் உயிர்களாகிய நாம் இருக்கின்றோம்
ஆனால் அறியாமை உயிரின் செயற்கை நிலைதான்
· ஆணவம் தன் இருப்பை காட்டாது, எனவே ஆணவத்தின் இருப்பை அறிய இயலாது
· நெல்லுக்கு உமியை போல உயிருடன் கலந்திருப்பது ஆணவம்
“நெல்லுக்கு உமியும் நிகழ்செம்பினிற் களிப்பும்
சொல்லிற் புதிதன்று தொன்மையே” - சிவஞானபோதம்
புரியவில்லை என்று கவலை வேண்டாம்,,,எனக்கும் புரியவில்லை,,அய்யா ஆறு நாகப்பனின் புத்தகத்தினை படித்த பின் இதுப்பற்றி எழுதுகிறேன், அப்போது புரிந்து கொள்ள முயற்சிப்போம்
பின்குறிப்பு நடைப்பெற்ற வகுப்பில் என்னுடைய குறிப்புகளை மட்டும் தொகுத்து அளித்துள்ளேன்,,முழுமையாக சைவ சித்தாந்தம் படிக்க முனைவர் ஆறு நாகப்பனின் சித்தாந்த சைவம் நுாலினை நாடுக
புரியவில்லை என்று கவலை வேண்டாம்,,,எனக்கும் புரியவில்லை,,அய்யா ஆறு நாகப்பனின் புத்தகத்தினை படித்த பின் இதுப்பற்றி எழுதுகிறேன், அப்போது புரிந்து கொள்ள முயற்சிப்போம்
பின்குறிப்பு நடைப்பெற்ற வகுப்பில் என்னுடைய குறிப்புகளை மட்டும் தொகுத்து அளித்துள்ளேன்,,முழுமையாக சைவ சித்தாந்தம் படிக்க முனைவர் ஆறு நாகப்பனின் சித்தாந்த சைவம் நுாலினை நாடுக
0 comments:
Post a Comment