நேற்று நாங்கள் கிழக்கு கடற்கரையில் வரும்வழியில் நடந்த என் மனதை உலுக்கிய சம்பவம்
நாங்கள் மூவர் (பெயர் யார் யார் என்று வெளியிட வேண்டாம்) கூட்ட இடத்தினை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தோம். மெக் டொனால்டு உணவகத்திற்கு அருகில் உள்ள சைக்கிள் வாடகைக்கு விடும் கடைக்கு வந்துவிட்டோம்...சைக்கிள்கள் மற்றும் கால் சக்கரம் கொண்டு நடப்பவர்கள் எங்களை கடந்து சென்று கொண்டிருந்தனர்...அதுவரை அனைத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் நடந்து கொண்டிருந்தோம்...மூவரும் தங்களது வெளிநாடு பயணங்களை முடித்துத் திரும்பியதால் தம் அனுபவங்களை அசைப் போட்டப்படியும் கடற்கரை அழகை ரசித்துக் கொண்டும் சென்று கொண்டிருந்தோம்...அப்போது சுமார் 18 வயது நிரம்பிய அல்லது அதற்கும் குறைந்த அகவையுடைய சிங்கைவாழ் தமிழ் இளைஞர்கள் மூவர் (காதில் கடுக்கன் தலைமுடி நிறத்தினை கொண்டு அவர்கள் இங்கு பிறந்தவர்கள் என்று யூகித்தோம்.) எம் மூவரில் அந்த சிறப்புக்குரிய நபரிடம் அண்ணா என்று அன்போடு அழைத்தான்..அவரும் ஆசையாய் அழைக்கிறான் என்று திரும்பி என்ன தம்பி ! பதிலளிக்க...அடுத்து அவன் கேட்ட கேள்வி எங்கள் இருவரையும் திக்கு முக்காட செய்தது...அந்த இடத்தில் அதுவும் அவரிடம் அத்தைகய கேள்வியை அவன் கேட்கிருக்க கூடாது...ஆனால் கேட்டுவிட்டான்..எங்கள் இருவருக்கோ அதிர்ச்சி தாங்க வில்லை...ஆனால் அண்ணன் என்று அழைக்கப்பட்டவர் தம்பியின் தோளில் கையை வைத்து எந்த ஒரு அதிர்ச்சியும் இன்றி பெரியவருக்குரிய பொறுமையுடன் கேள்விக்கு தக்க பதிலளித்தார்...
இதெல்லாம் எங்கள் இருவரால் சீரணிக்க கூட நேரமில்லா அக்கணத்தில் அந்த வாலிபன் கேட்ட அடுத்த கேள்வி ஒருவேளை எங்கள் இதயம் பலவீனமாக இருந்திருந்தால் இதை எழுதிக் கொண்டிருக்க நான் இன்று இருந்திருக்க மாட்டேன்...ஆனாலும் அத்தகைய மனதை உலுக்கிய கேள்வி கேட்க அவனுக்கு எப்படி இதயம் இணங்கியதோ தெரியவில்லை...கேட்டவுடன் அவனிடம் இருந்த புன்னகைக்கு என்ன பொருள் என்று விளங்கவில்லை...ஆனால் எங்களுடன் வந்திருந்தவர் அமைதியின் திருவுரு...ஒருவேளை அந்த வாலிபன் மிகச்சரியான நபரை தேர்ந்தெடுத்தான் அந்த கேள்விகளை தொடுத்திருக்க வேண்டும்..அவன் கேள்விகளைப் பற்றி சிந்தித்த நேரத்தினை விட யாரிடம் கேள்வி கேட்கலாம் என்று அதிகம் யோசித்திருப்பான்..அதனாலாயே அவன் அவரிடம் கேள்வி கேட்டான்..அதற்கு பதிலை அவரும் அன்புடன் எடுத்துரைத்தார்
கேட்ட கேள்வி என்ன ??
கேள்வி 1 அண்ணே இசிபி (ECP) எங்க இருக்கு ?
பதில் 1 இதுதானப்பா இசிபி
கேள்வி 2 இசிபி கடல் இருக்கும் சொன்னாங்க அது எங்க
பதில் 2 அதோ தெரியுது பார் அதான் கடல்
கேட்டவர் வயது: 18
இடம் :சைக்கிள் உலா வரும் பகுதி
பதிலளித்தவர் வயது: 34 இருக்கலாம்
என் கேள்வி என்னவென்றால் நாங்கள் மூவர் நடந்து செல்ல அந்த வாலிபன் அவரிடம் மட்டும் கேட்டது எனக்கு விளங்கவில்லை
யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்க :) :)
6 comments:
கரகாட்டகாரன் கவுண்டமணி போல ஆகிபோச்சே .....
யார பார்த்து கவுண்டமணினு சொல்லுற...அண்ண யாருன்னு தெரிஞ்ச இப்படி சொல்லமாட்ட
ம்ம்ம்ம்ம் நல்லாயிருக்கு
அந்த அண்ணன் யாருன்னா நம்ம அய்யங்கார்தான்,,,,அமைதியின் திருவுரு
V G P அவன் அப்படி கேட்டிருக்கலாம்
அது என்ன V G P ??
Post a Comment