Pages

RSS

Welcome to my Blog
Hope you enjoy reading.

Tuesday 28 December 2010

சசு என்றொரு அண்ணன்

நேற்று நடந்த நிகழ்வு - 28 டிசம்பர் 2010
சசுகாந்த் சண்முக வேலாண்டி பற்றிய சிறு குறிப்பு
                                         சசு 31 வயது விமான நிலையத்தில் பணி புரியும் இயந்திரவியல் படித்த பொறியாளர்...சொந்த ஊர் எதுவென்று கேட்டால் சில மாவட்டங்களைச் சொல்லி இங்கெல்லாம் இவ்வளவு காலம் இருந்ததால் எது என்று தெரியாது என்பார்....எனக்கு இவரை மே 2010 லிருந்து சோசப் அண்ணன் மூலம் பழக்கம்..நானும் இவரும் ஒரே வாரத்தில் பிடோக் வீட்டிற்கு குடி புகுந்தோம்...முதல் சில வாரங்கள் பெயர் சொல்லி அழைத்தாலும்..பிறகு அண்ணா என்று அன்புடன் அழைப்பேன்...வீடடில் சற்று நெருங்கி பழக கூடியவர் இவர்தான்...அடிக்கடி கிண்டலாக இருவரில் யாரேனும் ஒருவர் தான் வீட்டில் இருப்போம் என்று சண்டையிடுவோம்....நீ வெளியே போ என்ற அவர் சொல்ல...நானும் என் பங்கை பிரி  நான் வெளியே போகிறேன்...உங்களிடம் என்னால் குப்பை போட முடியாது என்று பேசி விளையாடுவோம்....என்னுடைய சிறு குறும்புகளை சகித்துக் கொண்டும் திட்டிக் கொண்டு நட்பு பாராட்டக் கூடியவர்..நல்ல பண்பாளர் என்பது  தெரிந்திருந்தாலும்..நேற்றைய சம்பவம் என்னுள் அவரின் தன்மையை வெளிகொணர்ந்தது

நேற்றைய சம்பவம்
                    நேற்று மருத்துவ விடுப்பால் ஓய்வில் இருந்தேன்...மாலை வீட்டு நண்பர் விசயும் (Admin) நானும் கீழே சென்று கடையில் சமைக்க தேவையான பொருட்களை வாங்கி வர புறப்பட்டோம்...முன்பே சசு தொலைபேசியில் இன்று மீன் சமைங்க விசய் என்று அவரிடம் கூற முடியாது இன்று கோழி என்று மறுத்தேன்.( விளையாட்டாக)...பிறகு கீழே வரும் போது சசுவும் அலுவலகம் முடிந்து  குடியிருப்புக்கு கீழே எங்களுக்கு எதிர் முனையில் நடந்து வந்து கொண்டிருந்தார்...
                 அவரைக் கண்டவுடன் நான் அவரை நோக்கி வேகமாக ஒடி சென்று மார்பினை எம்பி தள்ளினேன் (இருமுறை)...2ம் முறை விளையாட்டாக செய்த இந்த வேலை வினையானது சில நிமிடங்களுக்கு....அவருக்கு உடனே கோபம் தலைக்கேற என்னை நோக்கி வந்தார்...நான் தள்ளி விட்ட பின் பின்னோக்கி நகர்ந்தேன்...அவரோ என்னிடம் வந்து ஓர் அடி வேகமாகவும் கோபமாகவும் வைத்தார்....ஆனால் தர்ம சங்கடமாயிற்று...எப்போதும் அப்படி கோபப் பட கூடியவரல்ல...ஆனால் ஏன் அடித்தார்....ஒருவேளை அலுவலகத்தின் கோபம் அல்லது நான் தவறு செய்தோனோ என்று எண்ணியபடி என் அடிக்கிறாயா நீ என்ற எனக்கு இயற்கையாக அவர் அடித்தது எனக்கு கோபம் வரவில்லை...ஆனால் அவர் அடித்ததது விளையாட்டுக்கன்றி உண்மையாக இருப்பதால் நானும் எதிர்வினை புரிந்தாக வேண்டும்...நானும் அடித்தாக வேண்டும்...எனவே நானும் கோபப்பட்டேன்..ஆனால் நான் கோபப்பட ஆரம்பிக்கும் போது அவரின் கோபம் தணிந்தது...இதனால் பிரச்சினை பெரிதாகவில்லை..எங்களிடையே பெரிய பிரச்சினை வர வாய்ப்பு இல்லை...ஏனெனில் எங்களிடம் பகையில்லை..பிறகு விசய் தடுக்க அண்ணனும் சாந்தமாகி என்னை அணைத்து sorry என்று சொல்ல நானும் அமைதியடைந்தேன் அன்றி பழைய நிலையை அடையவில்லை....

நானோ..உனக்குத்தான் அடிக்க தெரியுமோ நான் திருப்பி அடிச்சா என்று சொல்ல சசுவும் முடிந்தா அடித்துப் பார் என்று சொல்ல எனக்கு கோபம் வந்ததது..அடித்தால் என்ன ஏன் என்னால் முடியதா என்ற வந்தது...பின்..அண்ணா முடிந்தா என்ற வார்த்தையை பயன்படுத்தாதே வேண்டாம்...ஏன் என்றால் அப்படிச் சொல்ல எனக்கு அடிக்க வேண்டும் என்ற  எண்ணம் மேலோங்கி அடித்துவிட்டால் எங்களிடம் நட்பு கலங்கப்படும்...

சசு : நீ பண்ணியது எனக்கு கோபம் வந்தது அதனால் அடித்தேன்...அது ஒரு நிமிடம் தான்...மற்றவர் மாதிரி மனதில் வைத்துக்கொண்டு பழி வாங்க தெரியாது..
நான்    கோபம் வந்தா அடிப்பாயா.... 

சசு  : அடிச்சேன் Sorry சொல்லி விட்டேன் அப்புறம் என்ன..

நான்  : அமைதி

பிறகு சரி விடு என்ற சொல்ல மாடி படி ஏறினார்....நானும் விசய்யும் கடைக்கு சென்றோம்....

பின்பு வீடு திரும்பியவுடன் பழைய நிலைக்கு திரும்பினோம்..சசு கோபத்தில் அடித்தற்கான நியாயம் அவரின் மார்பில் நான் கை வைத்து தள்ளிய போது அவரின் தங்கச் சங்கில் கீறி காயம் உண்டாக்கியதே என்று அறிந்தேன்...இருப்பினும் அதற்கு முன்பே அச்சம்பவம் மறந்ததால் மீண்டும் எதுவும் பிரச்சினையில்லை...

இதனால் கற்ற பாடம்

  •  மன்னிப்பு அனைவராலும் கேட்க முடியாத ஒன்று..சசு மன்னிப்பு கேட்டு பெரிய மனிதர் ஆகிவிட்டார்.
  •  கோபம் வந்த நிலையிலும் நிலைமையினை அறிந்து நான் செயல்பட்டேன்...(வார்ததைகளும்..செயல்களும்)
  • உண்மையான நட்பு இருக்கும் போது பிரச்சினை பெரிதாக வாய்ப்பில்லை.இச்சம்பவம் ஒர் நிரூபணம்
  • சம்பவம் முடிந்து பழைய நிலைக்கு திரும்புவது எனக்கு எளிதல்ல..ஆனால் இம்முறை விரைவில் பழைய நிலைக்கு திரும்பியாயிற்று
  • இதுவரை யாரையும் வன்மையான கோபம் கொண்டு தாக்கியது இல்லை..ஆனால் அதுபோல் ஒருநாள் என் எதிரியை அடிக்க வாய்ப்பு கிடைக்காத என்று ஏங்கி கொண்டிருந்தாலும்...அதற்கான நேரம் இதுவல்ல என்று கோபம் வந்த போதும் கூட என்னுள் ஒர் குரல் ஒலித்தது. ஆனால் இன்னும் என்னை என்னால் முழுமையான சாத்வீகவாதியாக என்னை பறைசாற்றிக் கொள்ள முடியவில்லை..ஏனெனில் என் எதிரியை தாக்குவதற்கான வாய்ப்பை இன்னும் என் மனம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே இந்த எண்ணம் என்னுள் இருந்து மறையும் வரை நான் சாத்வீகவாதியாக மாற முடியாது.
பின் குறிப்பு
  •    இப்பதிவு நான் விளையாட்டாக செய்ததை அண்ணன் மறக்கவும்..அண்ணன் அடித்ததை நான் மறக்கவும் எழுதப்பட்ட பதிவு...இவ்வளவு பெரிய பதிவு எழுதி மாதங்கள் பலவாயிற்று..
  • ஒபாமா விருந்து கொடுத்தது போல் அண்ணாரும் ஒரு இரவு உணவு விருந்தளித்து உற்சாகப்படுத்துவார் என்றே எழுதியிருக்கிறேன்.
 எனக்கு சசு வீட்டு நண்பராக அன்றி அண்ணனாக இருக்கிறார் என்று உள்ளுணர்வு ஏற்பட்டது...தம்பியின் நீண்ட நாள் கோரிக்கையான மதுவிலக்கை அண்ணார் விரைவில் அமல்படுத்துவார்.







0 comments:

Post a Comment